கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 531 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 11 அடியாக உயர்ந்துள்ளது. இதே போன்று பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 709 கனஅடி தண்ணீர் வருவதால் நீர்மட்டம் 45அடியாக உயர்ந்துள்ளது. சிற்றார் -1, சிற்றார் – 2 , பொய்கை , மாம்பழத் துறை அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேலும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தின் பிரதான தொழில்கள் முடங்கியுள்ளன. ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

Exit mobile version