தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம், தூத்துகுடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version