இரண்டாவது நாளாக தேனியில் பல்வேறு பகுதிகளில் கனமழை

தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று முதல் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 20 மில்லி மீட்டர் மழையும், போடியில் 8.4 மில்லி மீட்டர் மழையும், உத்தமபாளையத்தில் 8.3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version