பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை

பெரியகுளம் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்தி பட்டி, கோயில் புரம், குள்ளப்புரம் ,சந்திராபுரம், மருகால் பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இந்தநிலையில் அப்பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

மேலும் கரும்பு விவசாயம் முழுக்க பாதிப்படைந்தது. கோயில் புரத்தில் பழங்காலத்து மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் கரும்பு மற்றும் வாழை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version