தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 7 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version