தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 4 சென்டி மீட்டர் மழையும், விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்க கடல், அந்தமான், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version