மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேலடுக்கு சுழற்சி காரணமாக, 4 மாவட்டங்களில் கனமழையும், 16 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version