கோவையில் தொடர்ந்து இரு தினங்களாக கனமழை

கோவை மாவட்டம் வால்பாறையில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, கருமலை, ரொட்டிகடை, சோலையார் எஸ்டேட் போன்ற பகுதிகளில், கன மழை பெய்து வந்ததுள்ள நிலையில், தேயிலை தோட்டங்களில் பச்சை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இன்று காலையிலிருந்து மழை தீவிரமாக பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version