வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

வேலூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் குடியாத்தம் நகரில் குளிர்ந்த காற்று வீசியதை அடுத்து, பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மலை கிராமங்களான மோர்தானா, ஜங்கலப்பல்லி, கொட்டரமடுகு, கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version