வால்பாறை பகுதியில் இடியுடன் பலத்த மழை

கோவை மாவட்டம் வால்பாறையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தால் அதிக சிரமப்பட்டனர். இந்த நிலையில் கருமலை, பச்சைமலை, வெள்ளமலை, வால்பாறை, சோலையார் , பண்ணிமேடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மழையின் காரணமாக வால்பாறை வாழ் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version