சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையின் குறுக்கே சாய்ந்த ராட்சத மரம்

திண்டுக்கல்லில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் சூறைக் காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இதனால் திண்டுக்கல் – மதுரை சாலையில் உள்ள ஏ.புதூரில் ராட்சத புளியமரம், வேரோடு சாய்ந்தது. சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன், சாலையில் குறுக்கே விழுந்த ராட்சத மரத்தை அகற்றினர். சேதமடைந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சீரமைத்தனர்.

கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை மாநகர் பகுதியில், கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இடி மின்னலுடன் மழை பெய்தது.

பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாளையங்கோட்டையில், பனைமரம் திடீரென சாய்ந்ததால், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் சேதமடைந்தது.

 

Exit mobile version