தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாகவும், வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், கடலோர மாவட்டம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version