தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கன மழை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், வடகிழக்குத் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. வடகிழக்குத் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் எனவும் அறிவித்துள்ளது. இதேபோலக் கேரளம் லட்சத்தீவு, தெற்கு உட்புறக் கர்நாடகப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version