நெல்லை புளியங்குடியில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையினால் வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புளியங்குடி, வாசுதேவநல்லூர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் பகல் நேரங்களில் வீட்டிற்கு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 45 நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக வெப்பநிலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version