கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் சில மாதங்களாக வறட்சி ஏற்பட்டு வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மாலை பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கேரளாவின் அட்டப்பாடி, சிறுவானி பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையானது துவங்கியுள்ள நிலையில், அதன் தாக்கம் காரணமாக மேட்டுப்பாளையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.