தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version