கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம் கூடலூர், உத்தமபாளையம் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், இந்த சாரல் மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாரல் மழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் மழை பெய்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று இரவு 8 மணியளவில், திருச்செங்கோடு பகுதியைச் சுற்றிலும் மழை பெய்தது.

Exit mobile version