தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது

Exit mobile version