தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக திருவள்ளூவர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 80 மில்லி மீட்டர் மழை பதிவானது

Exit mobile version