தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – புவியரசன், வானிலை ஆய்வு மைய இயக்குநர்.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கடலூர், நாகை, ஈரோடு, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல், லட்சத் தீவு, கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என புவியரசன் எச்சரித்துள்ளார்.

Exit mobile version