தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version