கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதையொட்டி சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னையில் கடந்த சில நாட்களாக, அதிகாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும், சென்னையில் கிண்டி, அசோக்நகர், நுங்கம்பாக்கம், மற்றும் வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதேபோன்று, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

இந்தநிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version