கனமழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், சிவகங்கையிலும் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிகப்பட்டுள்ளது. சென்னையிலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version