ஒரு மணி நேரத்திற்கே குளம் போல இருக்குன்னா! ஒரு நாள் முழுவதும் மழை பெய்ஞ்சா??

சென்னையில் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், குளம்போல் மழைநீர் தேங்கியதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது.

திருவல்லிக்கேணி பகுதியில், கனமழை காரணமாக மழைநீர் தேங்கி வெளியேற வழியின்றி குளம்போல் காட்சியளித்தது.

இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு ஆளானதோடு, போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மழைக்காலம் என்பதால், அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததே மழை நீர்தேங்கக் காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version