தொடர் கனமழை : குற்றாலம், ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நெல்லை மாவட்டத்தின் குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் துவங்கியுள்ளது.

நீண்ட நாள்களுக்கு பிறகு தண்ணீர் வர துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அருவிகளில் நீண்ட நேரம் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version