வெப்பசலனம் காரணமாக அடுத்த 24மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை,கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version