பரிசோதனை செய்வதற்காக சென்ற சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்ற சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுகாதார பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டட்பதி பாகல் பகுதிக்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதார பணியாளர்கள், அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Exit mobile version