"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

திசையன்விளையில் தூயயோவான் சாமாரியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் கிறிஸ்போபர் ஜெபக்குமார். இவர் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் விடுமுறை தினத்தில் பள்ளிக்கு வரவழைத்து நெருங்கி பழக முயன்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே மாணவிகள் ஆன்லைன் வகுப்பு பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் செல்போன் நம்பருக்கு அபாச குறுஞ்செய்தி அனுப்பி சார்ட் செய்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், கடந்த மாதம் 29ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நாங்குநேரி அருகே பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version