திருச்சி கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர்

திருச்சியில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை திரளான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்..

காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க இயலாதவர்களுக்கு திருச்சி பெரிய கடை வீதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் ஆலயத்தில் அத்திவரதர் சேவை சாதித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் கைலாசநாதருக்கு ருத்ராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அத்திவரதர் சயன கோலம் மற்றும் நின்ற கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், இன்றும் நாளையும் நின்றகோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். பெரும் திரளான பக்தர்கள் இங்கு வருகைதந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version