தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்த முதியவர்

இலவச பஸ் பாஸ் மற்றும் மாத உதவி தொகை வழங்கிய தமிழக அரசுக்கு கண்பார்வையற்ற முதியவர் நன்றி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறையில் பார்வை இழந்த சிவமணி என்பவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் 6 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மாத உதவி தொகை மற்றும் இலவச பஸ் பாஸ் கோரி விண்ணப்பித்திருந்தார். இதை கவனத்தில் எடுத்து கொண்ட மாவட்ட ஆட்சியர் வினய் சிவமணிக்கு மாத உதவித் தொகையாக ஆயிரம் ரூபாயுடன் இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவமணி தமிழக அரசுக்கும், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version