சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல்

ஐதராபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஹவால பணம் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சுல்தான் பாஜார் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version