கண் கலங்க விடைபெற்றார் ஹர்பஜன் சிங்

12-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், வழக்கமாக போட்டி துவங்குவதற்கு முன்பும், நிறைவடைந்த பிறகும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பார். இவரது கருத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த அளவிற்கு ஹர்பஜன் சிங் தமிழில் புலமை அடைந்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

இதேபோல், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததால் கண்ணீர் மல்க விடைபெறுகிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், ஏதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல, அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் #CSKவுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version