ஸ்ரீ சாதனந்த மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

தாம்பரம் அருகே உள்ள மடத்தில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூரில் ஸ்ரீ சதானந்தா மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள சிறுவர்களுக்கு, அங்குள்ள நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் புகார் தெரிவிக்கும் ஒரு வீடியோ காட்சி ஒன்றும் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, காஞ்சிபுரம் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள், மடத்தில் ஆய்வு செய்து, அங்கிருந்த 9 சிறுவர்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஓப்படைத்தனர். இதற்கு முன்னதாகவே, சிறுவர்களின் புகாருக்கு உள்ளான, மடத்தின் நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் சம்பத் ஆகியோர் தலைமறைவாகிவிட்னர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள, தாம்பரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், தலைமறைவான நிர்வாகிகளைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version