அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி, நாமக்கnலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அணிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் கோயில்களில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, ஒரே கல்லால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, ஒரு லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Exit mobile version