அடிப்படை வசதிகளை செய்து தராத விடியா திமுக அரசுக்கு வீடுகளில் கருப்பு கொடி கட்டி கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகர், கோவிந்தன் நகர் பகுதியில் குடிநீர் வசதி இல்லை என்றும், தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மின் கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம், திமுக கவுன்சிலர், நகர்மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

Exit mobile version