காவலருக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை!

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இரவு தனது மைத்துனர் வாசுதேவனுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க சென்ற ஆயுதப்படை காவலர் விஜயனை சுற்றி வளைத்த மர்ம கும்பல், கற்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அஜித், வினோத், விவேக், ரவிகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த காவலர் விஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Exit mobile version