வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கையாடல்

குன்றத்தூரில் வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து, 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைக் கையாடல் செய்த வங்கி ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் உள்ள வங்கியில், ஈஸ்வரி என்கிற பெண் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். மகளின் திருமணத்திற்காக ஈஸ்வரி தனது வங்கிக் கணக்கில், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளார். இந்நிலையில், வங்கிக் கணக்கை ஈஸ்வரி ஆய்வு செய்த போது, பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுதொடர்பாக வங்கி மேலாளரிடம் ஈஸ்வரி புகார் அளித்தார். ஈஸ்வரியின் புகாரை அடுத்து, வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், வங்கியில் உதவியாளராகப் பணிபுரியும் பழனிவேல் என்பவர் பணம் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கையாடல் தொடர்பாக, குன்றத்தூர் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பழனிவேலைக் கைது செய்த குன்றத்தூர் காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வங்கி வாடிக்கையாளரான ஈஸ்வரியின் ரகசிய எண்ணைத் தெரிந்துகொண்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவ்வவ்போது பழனிவேல் பணம் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

Exit mobile version