தற்கொலை நாடகம் ஆடிய சூர்யதேவி உறவினர்களிடம் ஒப்படைப்பு

டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீதான புகாரில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சிக்கா என்கிற சிக்கந்தர், மற்றொரு டிக்டாக் பிரலபம் சூர்யாதேவியால் தாக்கிய வழக்கில், சூர்யாதேவி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சூர்யாதேவி வீடியோ ஒன்றை வெளியிட்டார். உடனே விரைந்த போலீசார், தூக்குக் கயிற்றுடன் சொகுசாக தூங்கிக் கொண்டிருந்த சூர்யாதேவியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைந்தனர். இதையடுத்து, டிக்டாக் பிரபலங்கள் சூர்யாவும், சிக்கந்தரும், சூர்யாதேவி மீது தாங்கள் அளித்துள்ள புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளனர்.

 

Exit mobile version