தென்காசியில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த மாற்றுத் திறனாளி கைது

தென்காசியில், குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த மாற்றுத் திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை அடுத்துள்ள புளியங்குடியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான பாலசுப்பிரமணியன் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத் தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, அவற்றை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, காவல்துறையினர் பாலசுப்பிரமணியனை ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர். அதில், பாலசுப்பிரமணியன் மீது எழுந்த புகார் உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் பாலசுப்பிரமணியனைக் கைது செய்து, அவரிடம் இருந்த ஒரு செல்போன் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க்கைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version