முகக்கவசம் அணியாத நபருக்கு கைவிலங்கு!

ஆஸ்திரேலியாவில் பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபருக்கு கைவிலங்கு பூட்டப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் புறநகர் பகுதியான ஜார்ஜ் ஹால் என்ற இடத்தில், பூங்கா ஒன்றில் தனது இரண்டு வயது மகளுடன் வந்திருந்தவர், முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி போலீசார், அவரின் கைகளை பின்புறமாகக் கட்டி விலங்கிட்டனர். இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவரும் இளைஞருக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஏதும் அறியாத குழந்தை, இளைஞரின் மடியில் அமர்ந்ததால் மனமிறங்கிய போலீசார் தந்தையை விடுவித்தனர். 

 

Exit mobile version