அரை நிர்வாணத்துடன் கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்

ராசிபுரத்தில் நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நபரின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது…

ராசிபுரம் பகுதியை சேர்ந்த ரமணி என்பவர் இரவில் உறவினர் வீட்டிற்கு சென்று காலையில் வீடு திரும்பியுள்ளார், வீட்டை திறந்து பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்ததால் சந்தேகமடைந்த அவர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அரை நிர்வாணத்துடன் மர்ம நபர் ஒருவர் வீட்டில் திருட முயற்சி செய்யும் காட்சிகள் பாதிவானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version