ஹத்ராஸ் வழக்கு- சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு

ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்துவருகின்றன. மேலும், சம்பவம் தொடர்பாக அலட்சியமாகச் செயல்பட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனக் கூறியுள்ள அவர், இதில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version