மொபைல் போனை ஹேக் செய்தால் 15 லட்சம் டாலர் பரிசு

இணைய உலகில் முதலிடத்தில் இருக்கும் Google சில வருடமாக பிக்ஸல் ஸ்மார்ட் போன்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தான் தயாரிக்கும் கூகுள் பிக்சல் போன்களை ஹேக் செய்தால் அவர்களுக்கு 15 லட்சம் டாலர் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இன்று ஸ்மார்ட்போன் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆண்ட்ராய்டுதான். அந்த ஆண்ட்ராய்டை உருவாக்கும் நிறுவனமான கூகுள், சில ஆண்டுகளாகச் சொந்தமாக ஸ்மார்ட்போன்களும் தயாரித்து வருகிறது. அப்படித் தான் தயாரிக்கும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வரையிலான பரிசுகளை அறிவித்துள்ளது கூகுள்.

இந்த அறிவிப்பின்படி, கூகுளின் பிக்ஸல் 3 மற்றும் பிக்ஸல் 4 ஸ்மார்ட்போன்களை நூதன முறையில் ஹேக் செய்பவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் பரிசை வெல்ல இந்த போன்களில் இருக்கும் டைட்டன் எம் என்ற பாதுகாப்பு சிப்பை ஹேக் செய்ய வேண்டியிருக்கும். இது ஆப்பிள் ஐபோனின் பாதுகாப்பு சிப்களுக்கு இணையான ஒரு பாதுகாப்பு சிப்பாகும். உதாரணத்துக்கு ஹேக்கர் ஒரு மால்வேரை ஆண்ட்ராய்டு மொபைலில் ஏற்றப் பார்க்கிறார் என்றால் உடனடியாக ஆப்களின் பாஸ்வேர்டை இது பாதுகாக்கும்.

இதனைத் தாண்டிக் கோளாறுகளைக் கண்டுபிடித்தால் 15 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. மொபைலில் உள்ள தகவல்களைத் திருடுதல் மற்றும் லாக் ஸ்க்ரீன் பை-பாஸ் போன்ற குறிப்பிட்ட வகையான தாக்குதல்களுக்கு 5 லட்சம் டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றதொரு போட்டியை ஆப்பிள் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தது. தற்போது கூகுளும் அந்த முறையினைக் கையில் எடுத்துள்ளது

நவம்பர் 21-லிருந்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த அதிகப் பரிசுத் தொகை செல்லும். எதற்கெல்லாம் என்ன பரிசுத் தொகை என்பதைக் கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பரிசுத் திட்டத்தின் விதிமுறை பக்கத்தில் சென்று பார்க்கலாம். இவை அனைத்தும் தற்போது வரை அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டுமே இது பொருந்தும்

சமீபத்தில் எல்லாப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் புதிய மெபைல் சாதனங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த இதுபோன்ற ‘Bug Bounty’ போட்டிகள் நடத்தப்பட்டு பெரிய தொகை பரிசாக அளிக்கப்பட்டுவருகிறது.

இதுவரை அதிகபட்சமாக குவாங்க் காங்க் என்பவருக்கு ஒரே டச்சில் பிக்சல் 3-யை ஹேக் செய்ததற்காக வழங்கியது. இதில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு வெகுமதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 61 ஆயிரம் டாலரும் குரோம் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் டாலரும் என மொத்தம் 2 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் கூகுள் 2 லட்சம் டாலர் வெகுமதியாக வழங்கியதே அதிகப்பட்சத் தொகையாக இருந்தது. கூகுளைவிட அதிகமாக வாவே (huawei) நிறுவனம் ரீமோட் முறையில் தனது ஆண்ட்ராய்டு சாதனங்களை ஹேக் செய்ததற்காக 2 லட்சத்து20 ஆயிரம் டாலர் வழங்கியிருந்தது.

தகவல் திருட்டு மற்றும் அடுத்தவர் மொபைலை ஹேக் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. எனவே இதைத் தடுக்க மொபைல் நிறுவனங்கள் இந்த உத்தியைக் கையில் எடுத்துள்ளனர்

Exit mobile version