கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி

எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்ததை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமுதியை அடுத்த திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாமல் சிவகாசியில் ரத்த தானம் செய்துள்ளார். அந்த எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், சமீபத்தில்தான், ரத்த தானம் செய்த ரத்த வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கும், எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து, மன உளைச்சலுடன் இருந்த அந்த இளைஞர், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

 

Exit mobile version