பதுக்கி வைக்கப்படிருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

சென்னை அடுத்த அம்பத்தூரில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்பத்தூர் காவல் துணை ஆணையாளர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அயப்பாக்கத்தில் உள்ள தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ராமாபுரம் பகுதியில் 600 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். பதுக்கலில் ஈடுபட்ட தேன்ராஜ், அப்பாஸ், கோபால்,சூரியபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version