ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சண்டை – பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் அருகே பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அடுத்த முஜ்கண்ட் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியின் எதிரே இருக்கும் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

பயங்கரவாதிகள் பிறரை தொடர்பு கொள்வதை தடுக்கும் விதமாக ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை முதல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப் பட்டிருப்பதாகவும், 5 வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version