துப்பாக்கி, ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ

துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் டிக்டாக் செயலில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்த பரத் என்ற பொறியியல் பட்டதாரி, மாரி பரத் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பரத் மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், கண்ணன் ஆகியோர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவி வந்ததையடுத்து, ராசிபுரம் காவல்துறையினர், டிக் டாக் வீடியோவில் உள்ளவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், மூன்று பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் இருந்தது போலியான கத்தி மற்றும் துப்பாக்கி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என 3 இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Exit mobile version