இங்கிலாந்தில் குஜராத் தொழில் அதிபர் நிரவ் மோடி அதிரடி கைது

இந்திய வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பை கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தவில்லை. மேலும் திடீரென நாட்டை விட்டு நிரவ் மோடி தப்பிச்சென்று விட்டார். நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த பல மாதங்களாக அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் லண்டனில் அவர் சொகுசாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் அவரை கைது செய்ய இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பிடிவாரண்டை அமல்படுத்திய இங்கிலாந்து போலீசார் நிரவ் மோடியை அதிரடியாக கைது செய்தனர். அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என கூறப்படுகிறார்.

Exit mobile version