குஜராத், பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு

குஜராத், பனஸ் கந்தா மாவட்டத்தில் நிகழ்ந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் பனஸ் கந்தா மாவட்டத்திலுள்ள திரிஷுல்யா காட் என்ற மலைப்பாங்கான இடத்தில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திரிஷுல்யா காட் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், திரிஷுல்யா காட் என்ற இடத்தில் பேருந்து வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ள நிலையில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Exit mobile version