குஜராத், அசாம் பாஜக முதல்வர்களை எழுப்பிவிட்டோம் – ராகுல் காந்தி

குஜராத், அசாம் மாநில பாஜக முதலமைச்சர்களை எழுப்பிவிட்டதாகவும், இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியையும் எழுப்புவோம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில் 600 கோடி ரூபாய் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், குஜராத் மாநிலத்தில் 650 கோடி மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். பாஜக முதலமைச்சர்களின் நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் குஜராத் மற்றும் அசாம் மாநில முதலமைச்சர்களை காங்கிரஸ் எழுப்பி விட்டதாகவும், பிரதமர் மோடி இன்னும் தூங்கி கொண்டிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். தூக்கத்தில் இருக்கும் பிரதமரையும் எழுப்புவோம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

 

Exit mobile version